By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உரிமைப் போராட்டத்தில் எம்முடன் இணைந்து நின்றவர் தோழர் மகேஷ் – அவருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > உரிமைப் போராட்டத்தில் எம்முடன் இணைந்து நின்றவர் தோழர் மகேஷ் – அவருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்!
இலங்கைச் செய்தி

உரிமைப் போராட்டத்தில் எம்முடன் இணைந்து நின்றவர் தோழர் மகேஷ் – அவருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Last updated: 2024/07/25 at 11:50 PM
Published July 25, 2024 217 Views
Share
3 Min Read
SHARE

எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத,  ஆழத்தடம் பதித்தவர் தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

குறித்த அனுதாபச் செய்தியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –

வாலிப வயதின் வசீகரக் கனவுகளை வெறுத்து   உரிமையுடன் வாழத்துடிக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடியலுக்காக தன்னையே தந்தவர், உறுதியின் உறைவிடம், உணர்வின் ஊற்றிடம், அஞ்சுதல் அறியா நெஞ்சுரன் அவர்.இதை நான் நேரில் கண்டவன்,

பனாகொடை படைமுகாமில் கைதாகி அவரும் நானும் இருந்த வேளை எனக்கு நடந்தது போலவே அவருக்கும் வதைகள் நடந்தன. நேசித்த மக்களுக்காக நாமிருவரும் வலிகளை சுமந்த வேளை நெஞ்சுரம் அவரிடம் கண்டேன்.

இது படை முகாம், எம்மை சிறைசாலைக்கு மாற்றுங்கள்!. என்ற கோரிக்கையை முன் வைத்து நாமிருவரும் ஈழப்போராட்ட வரலாற்றில்  முதன்முதலில் வதை முகாமிற்குள் இருந்தே போராட்டம் நடத்தும் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தவர்கள்,..

அதன் போது என்னுடன் சேர்ந்து அவர் எதிர் கொண்ட சவால்களை எண்ணிப்பார்க்கிறேன்,.. வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டோம்,. 83 இல்  அங்கொரு இரத்த வேள்வி நடந்தது,.

கொன்று பலியாக்கப்பட்ட சக கைதிகளின் சடலங்களின் மத்தியில் எழுந்து நின்று  சாவா வாழ்வா என்று போராடி உயிர் பிழைத்தோம்.

எஞ்சிய கைதிகளையும் காப்பாற்ற என்னுடன் சேர்ந்து வீரத்தின் விளை நிலமாக அவர் களமாடி நின்ற காட்சிகளை கண்டேன்,..

ஒரு சிறகசைப்பில் மட்டு நகர் சிறையுடைத்தோம். இது வெறும் வீரப்பிரதாபம் அல்ல., அறிவாயுதம் எமக்கு துணை நின்ற விவேகத்தின் அடையாள வெற்றி.

நெடு நாள்கள் உள்ளிருந்தே திட்டமிட்டு நாம் மட்டுநகர் சிறையுடைத்து வெளியே வந்தோம். அதில் தோழர் மகேஷ் அவர்களும் ஒருவர்.

உணர்வால் ஒன்று பட்டாலும், அவர் வேறு திசையிலும் நாம் வேறு திசையிலும்  வெளியே சென்றிருந்தோம்,..

கொள்கை ஒன்று,  ஆனாலும் கோட்டைகள் இருவேறு,. உரிமை போராட்ட களத்தில் அவர் தமிழ் ஈழ இராணுவம் என்ற அமைப்பின் சார்பிலும்  நான் எனது ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் சார்பிலும்  எமது நீதியான உரிமைப்போராட்ட களத்தில் நின்றிருந்தோம்..

சகோதரப்படு கொலைகளாலும், அளவிற்கு மிஞ்சிய அர்த்தமற்ற அழிவுகளாலும்  எமது உரிமைப்போராட்டம் நலிவுற்றிருந்த வேளை இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு உருவானது,..

தீர்க்க தரிசனமாக அதை ஏற்றுக்கொண்டோம். தேசிய நல்லிணக்க வழியில் செல்ல ஆரம்பித்தோம்,..

போராட்ட களத்தில் சாகச வீரனாக பார்க்கப்பட்ட தோழர் மகேஷ் இந்திய சிறையிலும், தென்னாபிரிக்க சிறையிலும் கைதாகி இருந்த வேளை யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை,..

எனக்கிருக்கும் தார்மீக கடமையை புரிந்து கொண்ட தோழர் மகேஷ் என்னுடன் தொடர்பு கொண்ட போது,..அவர் தாயகம் திரும்ப உதவினேன்,. இற்றோடு என் கடமை முடிந்தது நீங்கள் விரும்பிய ஜனநாயக அரசியலை சுதந்திரமாக முன்னெடுக்கலாம் என்றேன்.

ஆனாலும் அவர் எமது தேசிய நல்லிணக்க வழிமுறையை தேர்ந்தெடுத்தார், எம்முடன் இணைந்தார்.

பன்மொழி ஆளுமையாக,  பன்முக சிந்தனையாளனாக,.. இராஜதந்திர பேச்சாளனாக,.. ஊடக சந்திப்புகளில்,.. அரச உயர் மட்ட பேச்சுகளிளில்,..தென்னிலங்கை கட்சிகள்,. மற்றும் வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்புகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

தேர்தல் பரப்புரை மேடைகளில் மட்டுமன்றி,. கிராமங்கள் தோறும் மக்களை  தேடிச்சென்றும் எமது கட்சியின் அறம் சார்ந்த உண்மைகளை எடுத்துரைத்தார்.

உடல் தளர்ந்தாலும், உணர்வு தளராமால்,  இறுதிவரை என்னுடன் உரையாடி தோழர் நலமா? என்றென அவர் என்னிடம் கேட்கும் குரல்  என்றும் என் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்,..

தோழர் மகேஷ் அவர்களின் கல்லறையின் காதோரம் அவர் எண்ணிய கனவுகள் ஈடேறிய நல்ல சேதி விரைவாக வந்தடையும்..

வலிமை மிக்கவர்கள் செயற்கை மரணங்களை வெல்ல முடியும்,. இயற்கை மரணங்களை எந்த வலிமையும் வெல்ல முடியாது,.. தோழர் மகேஷ் அவர்களுக்கு  எனது அஞ்சலி மரியாதை! என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஈழ தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது – கலாநிதி விக்கிரமபாகுகருணாரத்ன!
Next Article ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சரத் பொன்சேகா அறிவிப்பு.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?