By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கையில் நிறுத்தப்படும் சீனக் கப்பலால் இந்தியா கவலை!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கையில் நிறுத்தப்படும் சீனக் கப்பலால் இந்தியா கவலை!
இலங்கைச் செய்தி

இலங்கையில் நிறுத்தப்படும் சீனக் கப்பலால் இந்தியா கவலை!

Last updated: 2023/08/14 at 12:26 AM
Published August 14, 2023 360 Views
Share
3 Min Read
SHARE

கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 ஒக்டோபர் மாதம்  நிறுத்தப்படுவது குறித்து புதுடெல்லி கவலைகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இலங்கையின் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷி யான் 6 வருகைக்கு இலங்கை இன்னும் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷி யான் 6 நவம்பர் 2023 வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கவலைகள் குறித்து தனது நாடு அக்கறை கொண்டதாக இருக்கும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையிலேயே, சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடையும் என தெரிவிகப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் போர்க்கப்பலான Hai Yang 24 கடந்த 10 ஆம் திகதி 138 பேர் கொண்ட குழுவினருடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தது.

குவாங்சோவை தளமாகக் கொண்ட 3999 தொன் எடைகொண்ட ஷி யான் 6, தற்போது தென் சீனக் கடலில் இருப்பதுடன், தெற்கு நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷி யான் 6 இன் விஜயத்தின் போது, இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்த ஆராய்ச்சியாளர்கள் கப்பலில் ஒரு அறிவியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்தக் கப்பல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இரு துறைமுகங்களில் தரித்து நின்று இலங்கை விஞ்ஞானிகள் இல்லாமல் சுமார் ஒரு மாதத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் உத்தியோகபூர்வ கருத்து எதையும் வெளியிடவில்லை. ஆனாலும், இந்தியா இந்த விவகாரத்தை இராஜதந்திர மட்டங்களில் கலந்துரையாடல்களை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்வது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் கையில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டது.

இந்த கப்பலின் வருகைக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அனுமதி வழக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சுற்றி வளைக்கும் சீனா அனைத்து பக்கங்களிலும் இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி முதன்மையாக பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் மூலம், முக்கிய இடங்களில் அதன் செல்வாக்கு மற்றும் இருப்பை மேம்படுத்தும் திறனுடன், சீனா முதலீடுகளை செய்து வருகின்றது.

குவாட் மற்றும் பிற ஆசியான் சக்திகளை எதிர்கொள்வதற்காக எதிர்கால அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்காக இந்தோ-பசிபிக் பகுதியை சீனா வரைபடமாக்குகிறது என்பது இப்போது பகிரங்கமாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் கொழும்பு துறைமுகத்திற்கு சீன போர் கப்பலொன்று வந்திருந்த நிலையில், அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஷி யான் 6 வருகை குறித்து இந்தியா தற்போது வரை அமைதி காத்தாலும் குறித்த கப்பலின் வருகையை தடுத்து நிறுத்தி இந்திய மும்முரமாக செயற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனெனில் இலங்கைக்கு சீன போர் மற்றும் ஆய்வு கப்பல்கள் வருவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

Anarkali August 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் நூல் வெளியீடு!
Next Article மன்னார் மடு திருத்தலத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு அவசர கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?