போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவுதெரிவித்துள்ளது.
வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில்Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும் என்று ICTA இன்உறுப்பினர் ஹர்ஷா புரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அடிப்படைப் பணிகள் ICTA இனால் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோவ்பே என்பதனூடாக வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள்மற்றும் கல்விக் கட்டணங்கள் போன்ற அரசு தொடர்பான சேவைகளுக்காகபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஒன்லைன் கட்டணதளமென்பது குறிப்பிடத்தக்கது.