இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகபணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம்இடம்பெற்ற சந்திப்பு குறித்து தமது ‘X’ கணக்கில் பதிவிட்டு இதனை அவர்கூறியுள்ளார்.
முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்துஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியானசீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேசநாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் தனது ‘X’கணக்கில் மேலும்தெரிவித்துள்ளார்.