அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு – ட்ரம்ப் தெரிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை,அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள் என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும் பேசலாம், ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்

Share this Article
Leave a comment