வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (11.03) மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.