வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (07.03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.