வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 49 மகளிர்களுக்கு சுய தொழிலை மேம்படுத்த உபகரணங்கள் வழங்கி வைப்பு
வடமாகாண மகளிர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று தினம் புதன்கிழமை (17/12) மாலை அடம்பன் பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண மகளிர் விவகார புனர் வாழ்வளித்தல்,சமூக சேவைகள், கூட்டுறவு ,உணவு வழங்கல் விநியோகம் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 49 பெண் பயணாளிகளுக்கான உதவித் திட்டம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
சுய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் சுய தொழில் நடவடிக்கை ளை மேம்படுத்தும் நோக்குடனும் குறித்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர்,உள்ளடங்களாக திணைக்கள அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.