குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மற்றும் நயினாதீவு பயணிகள் போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங்கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்டசட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்தயோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நெடுந்தீவு ,நயினாதீவு ஆகிய இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக்குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

இந்த இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள்மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள்வழங்கப்படுவதுடன், சமூக, சமய மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது காணப்படுகின்ற இறங்குதுறை நீண்டகாலமாக சமுத்திரநிலைமைகளால் புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share this Article