பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்றஇளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில்இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வந்த நிலையில் அதில் ஒருவர்இன்றைய தினம் காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்குசென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
தேவாலயத்திற்கு சென்ற மூதாட்டி வீட்டிற்கு வந்த போது இரத்த வெள்ளத்தில் வீட்டில் இருந்த மூதாட்டி கிடப்பதை அவதானித்து அயலவர்களுக்கு தகவல்தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தடவியல் பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பினர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார்அயல் வீட்டு இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டஇளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.