கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான விமான போக்குவரத்துக்கான பயணங்களை டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமானசேவையினை விருத்தி செய்யும் நோக்கில் குறித்த நிறுவனமானது இலங்கைசிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்குதிட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின்பரிசோதனையாளர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமானபயணத்தினை இன்றையதினம் (ஜூன்02) இரத்மலானை விமானநிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரைமேற்கொண்டுள்ளது.
குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலிசர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.