By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் மரணம்.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் மரணம்.
உலகச் செய்தி

24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் மரணம்.

Last updated: 2025/03/09 at 9:12 PM
Published March 9, 2025 117 Views
Share
4 Min Read
SHARE

உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கானகுழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.

ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயேஇயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88.

ஆஸ்திரேலியாவில் அவர் ‘தங்கக் கை மனிதர்‘ என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்படும் ஒரு அரிய வகை ஆன்டிபாடிஇருந்தது. கருவில் இருக்கும் குழந்தையை தாயின் ரத்தம் தாக்கும் அபாயம்இருக்கக் கூடிய கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்கஇந்த ஆன்டிபாடி பயன்படுகின்றது.

14 வயதில், அவருக்கு செய்யப்பட்ட மார்பு அறுவை சிகிச்சையின் போது, பலமுறை அவருக்கு ரத்தமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவர் ரத்த தானம்செய்ய உறுதியளித்ததாக, ஹாரிசனுக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலியசெஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவித்தது.

18 வயதில் அவர் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ய தொடங்கினார். தனது 81 வயது வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை ஜேம்ஸ்ஹாரிசன் இதனை செய்து வந்துள்ளார். இதன் மூலம் சுமார் 24 லட்சம்குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில், அதிக முறை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம்செய்ததற்கான உலக சாதனையை அவர் படைத்தார். 2022 ஆம் ஆண்டுஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை முறியடித்த வரை, ஜேம்ஸ்ஹாரிசன் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.

“எந்த செலவும் அல்லது வலியும் இல்லாமல், எனது தந்தை பல உயிர்களைக்காப்பாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்“, என்கிறார் ஹாரிசனின் மகள்டிரேசி மெல்லோஷிப்.

“இது வலிக்காது என்றும், நீங்கள் காப்பாற்றும் உயிர் உங்களுடையதாக கூடஇருக்கலாம் என்றும் எனது தந்தை எப்போதும் கூறுவார்” என்று டிரேசி கூறினார்.

டிரேசி மற்றும் ஜேம்ஸ் ஹாரிசனின் இரண்டு பேரக் குழந்தைகளுக்கும் anti-D தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

“எங்களைப் போன்ற பல குடும்பங்கள், அவரது இந்த செயலால் பலன்அடைத்துள்ளதைப் பற்றி கேள்விப்பட்டது ஜேம்ஸுக்கு மகிழ்ச்சியை அளித்தது” என்று அவர் கூறினார்.

Anti-D தடுப்பூசிகள் கருவில் உள்ள மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குவரும் ஹீமோலிடிக் நோய் அல்லது HDFN எனப்படும் ஆபத்தான ரத்தக்கோளாறிலிருந்து பாதுகாக்கின்றன.

இந்த நோய் கர்ப்ப காலத்தின் போது வருகிறது. தாயின் ரத்த சிவப்பணுக்கள்கருவில் வளரும் குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுடன் பொருந்தாத போதுஇந்த நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.

தாயின் நோயெதிர்ப்பு அமைப்பு குழந்தையின் ரத்த அணுக்களைஅச்சுறுத்தலாகக் கருதி அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் குழந்தைக்கு கடுமையான ரத்த சோகை, இதய செயலிழப்பு அல்லதுமரணம் கூட ஏற்படலாம்.

1960-களில் anti-D தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, HDFN நோயால்பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது. ஜேம்ஸ் ஹாரிசனின்ரத்தத்தில் anti-D ஆன்டிபாடி எவ்வாறு இவ்வளவு அதிகமாக இருந்தது என்பதுகுறித்து தெளிவாக தெரியவில்லை. 14 வயதில் அவருக்கு அதிக அளவில் ரத்தமாற்றம் செய்யப்பட்டதால் இதுபோல நடந்திருக்கக் கூடும் என்று சிலஅறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் 200 க்கும் குறைவான anti-D ஆன்டிபாடிகளை தானம்செய்பவர்களே உள்ளனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45,000 தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உதவுகிறார்கள் என்றுலைஃப்பிளட் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின்ரத்த தான சேவை தெரிவிக்கிறது.

ஹாரிசன் மற்றும் அவரைப் போல anti-D ஆன்டிபாடிகளை தானம்செய்பவர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு செல்களைப்போன்று, ஆய்வகத்திலே anti-D ஆன்டிபாடிகளை உருவாக்க லைஃப்பிளட்அமைப்பு, ஆஸ்திரேலியாவின் வால்டர் அண்ட் எலிசா ஹால் மருத்துவ ஆராய்ச்சிநிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளுக்கு உதவ இந்த ஆய்வகத்தில்உருவாக்கப்பட்ட anti-D ஆன்டிபாடிகளை பயன்படுத்தும் காலம் வரும் என்றுஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த புதிய சிகிச்சை முறையை உருவாக்குவது நீண்ட காலமாக ‘முயற்சிகள்எடுக்கப்பட்டு வரும் ஒரு விஷயம்‘ என்று லைஃப்பிளட் ஆராய்ச்சி இயக்குநர்டேவிட் இர்விங் கூறினார்.

போதுமான தரத்தில் மற்றும் அளவில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக் கூடிய, ரத்த தானம் செய்வதில் உறுதி பூண்டுள்ள நபர்கள் குறைவாக இருப்பதாகவேஅவர் குறிப்பிட்டார்.

நன்றி – பிபிசி

You Might Also Like

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

SUB EDITOR March 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் இன்று இடம் பெற்ற நெடு. ம. வி. பழைய மாணவர்கள் சந்திப்பு !
Next Article யூடியூபர் கிருஷ்ணா பொலிஸாரிடம் ஒப்படைப்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

உலகச் செய்தி

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

June 24, 2025
உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?