2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கைசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப் பயணிகள் தொடர்பானபுதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த புள்ளிவிபரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும்75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதனுடன் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 1,801,151 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையானோர்இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.அந்த எண்ணிக்கை 4 இலட்சம்எல்லையை நெருங்கியுள்ளது.
இதுவரை இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை 396,274 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியம் (167,886), ரஷ்யா (125,950), ஜேர்மனி (111,677) மற்றும் சீனா (108,040) ஆகிய நாடுகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும்அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பிரான்ஸ் (90,250), அவுஸ்திரேலியா (81,040), நெதர்லாந்து(53,922) மற்றும் அமெரிக்கா (50,027) ஆகிய நாடுகளிலிருந்தும்ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டுஇலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இத்தாலி (39,932), கனடா (37,606), ஸ்பெயின் (36,430), போலந்து (36,389) ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 20 இலட்சத்திற்கும் (2,053,465) அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.
இலங்கைக்கு இறுதியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தஆண்டு 2018 ஆகும்.
அப்போது 23 இலட்சத்திற்கும் (2,333,796) அதிகமான சுற்றுலாப் பயணிகள்வருகை தந்திருந்தனர்.
இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை 20 இலட்சம் எல்லையைகடந்து 4 சந்தர்ப்பங்களில் உள்ளது. அதாவது 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆகும்.