யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று மாமன் முறையானவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
சந்தேகநபரைக் கைது செய்துள்ள கோப்பாய் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குழந்தையின் பிறப்புறுப்பில் தென்பட்ட அடையாளங்களை அடுத்து, குழந்தையைத் தாய் வைத்தியரிடம் கொண்டு சென்றுள்ளார்.
வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தை பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
குழந்தையின் தாயிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் தாயின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாயின் சகோதரனே வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கின்றமை விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.
சந்தேகநபர் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அம்புலன்ஸ் சாரதியாகக் கடமையாற்றும் இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
11 மாதக் குழந்தை பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், பாலியல் ரீதியான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதற்குப் பிரதான காரணமாக போதைப் பொருள் பாவனையே காரணம் என்று கூறப்படுகின்றது.