வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணைபிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசபண்பாட்டு விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடககலைஞர் அமரர் செல்லையா சிவராசா அரங்கில் இன்று (ஜூன் 24) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
வேலணை பிரதேச செயலர் க.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர்திருமதி நி.லாகினி, ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவன்ஆகியோரும், கௌரவ விருந்தினராக சரவணை மேற்கு மூத்த கலைஞர்கலாபூஷணம் ம.கந்தையாவும் கலந்துகொண்டனர்.
வேலணை பிரதேச செயலக வளாகத்திலிருந்து கலாசாரத்தைபிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்திப் பவனிகள் ஆரம்பமாகி விழா அரங்கிற்கு சென்றதுடன் கலாசார நடனங்களும் நடைபெற்றன. மேடை நிகழ்வுகளில், கலைஞர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.