யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிதொடக்கம் 26 ஆம் திகதி வரை ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்டமக்களுக்கான
சீன அரசாங்கத்தின் “சீனாவின் சகோதர பாசம்” செயற்றிட்டத்தின் கீழ் உலர்உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்தலைமையில் நேற்றைய தினம் (பெப். 10) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி கெளரவ சூயன்வெய், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
கன மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட 15 பிரதேச செயலகபிரிவுகளுக்குட்பட்ட 1070 குடும்பங்களிற்கு தலா ரூபா 6500.00 பெறுமதியானஏறத்தாள 6.90 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை சீனாஅரசாங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.