வரலாற்றுப் பாரம்பரியத்துடன் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக திருமறைக் கலாமன்றத்தால் வருடாந்தம் மேடையேற்றப்படும் ‘வெள்ளியில் ஞாயிறு’ தவக்காலத் தியான ஆற்றுகை, இன்று (ஏப்ரல் 11) மீண்டும் மேடையேறுகிறது.
யாழ்ப்பாணத்தில் அமைந்த திருமறைக் கலாமன்ற அரங்கில், இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி வரை, ஒவ்வொரு மாலை 6.45 மணிக்கும் இந்த ஆற்றுகை நடைபெறவுள்ளது.