வெளிநாடு செல்லவுள்ளோருக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்த முக்கிய அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கு நடத்தப்பட்டுவந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (14 மார்ச்) தொடக்கம் மேற்கொள்ளப்படாது என பணிப்பாளர், வைத்திய கலாநிதி நந்தகுமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என கூறினார்.

அதேவேளை நோயாளிகளுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article