உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 517 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் இதர ஆவணங்களை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்வைத்து மூன்று கட்டங்களாக, சம்பந்தப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும்அலுவலர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (மே 05 ) மு.ப 11.40 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்துச் செல்வதற்காக, இலங்கைபோக்குவரத்து சபையினது பேரூந்துக்கள் மற்றும் தனியார் சிற்றூர்திகள் என 197 பேரூந்துக்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.