யாழ்ப்பாணத்தின் வழுக்கையாற்றை புனரமைத்து, நிலத்தடி நீர் நிலையை உயர்த்துவதும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதுமான நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒரு ஆய்வுப் பணியை இன்று (ஜூன் 21) தொடங்கினர்.
வறுத்தலைவிளான் பிள்ளையார் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஆய்வுப் பயணத்தில், அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மற்றும் பல அரச திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வழுக்கையாற்று வழியாக ஆராய்ச்சி பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. இது வறுத்தலைவிளான் பகுதியில் தொடங்கி அராலியில் முடிவடைவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முயற்சியில் பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் சிறப்பாக ஈடுபட்டிருந்தனர்.