வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப்பெருவிழா நாளை (ஜூலை 29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில் சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்திற்கான கொடிச்சீலைஎடுத்துவரும் நிகழ்வு இன்று (ஜூலை 28) இடம்பெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கானகொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரியவழக்கமாகும்.
நல்லூரிலுள்ள செங்குந்தர் மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கானகொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம்முருகன் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத்தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதமொன்றின் மூலம் பருத்தித்துறைவீதி ஊடக எடுத்துச் செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினைவந்தடைந்தது.
ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்றுகொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாளை (ஜூலை 29) காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும்நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள்இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 21 தேர்த்திருவிழாவும் ஓகஸ்ட் 22 தீர்த்ததிருவிழாவும்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.