வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின்தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலநடவடிக்கைகள் குறித்தும், அதனுடன் தொடர்புடைய சுயநல செயற்பாடுகள்குறித்து கடுமையான கவலை வெளியிட்டுள்ளது இலங்கை ஆசிரியர் சேவைசங்கம்.
இச் சங்கத்தின் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ், இன்று (ஒக்.12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் வலிகாமம் வலய செயலாளர்ப.கஜமுகன், யாழ்.வலய செயலாளர் க.பரமேஸ்வரன், தென்மராட்சி வலயசெயலாளர் இ.சிவானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதியாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்டஇடமாற்றப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள், உரிய நிர்வாகநடைமுறைக்கேற்ப தங்களுடைய மேன்முறையீடுகளை அதிபர் ஊடாக வலயம்அல்லது மாகாண கல்வி திணைக்களத்திற்கு சமர்ப்பித்து தீர்வினைப் பெறமுடியும்.
ஆசிரியர்களுக்கான நியாயங்களைப் பெற்றுத்தர இலங்கை ஆசிரியர் சேவைசங்கம் எப்போதும் முன்நின்று செயற்படும்.
அதேவேளை, இடமாற்ற சபையில் இடம்பெற்ற சில நடவடிக்கைகள் குறித்துஅவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய இலங்கை ஆசிரியர்சங்கத்தின் முக்கிய பதவியாளர் ஒருவர் தனது சகோதரிக்காக தன்னிச்சையாகச்செயல்பட்டு, பொய்யான கருத்துகளைப் பரப்பி ஆசிரியர்களை தவறாக வழிநடத்தமுயற்சித்துள்ளார். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும்பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான செயல்கள் வடமாகாண கல்வியை சீரழிக்கும் நோக்கத்துடன்மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைபாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் மேற்படிசகோதரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, முரண்பட்ட நிலையில் இடமாற்ற சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததுகவலைக்குரிய விடயமாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விடகுடும்ப நலனை முன்னிலைப்படுத்தும் இவ்வாறான சுயநல நடவடிக்கைகளைஎங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, வடமாகாண ஆசிரியர்கள் தங்களுக்கான நியாயங்களை உரியவழிமுறையில் பெற்றுக்கொள்ளவும், சுயநல அரசியல் செயற்பாடுகளுக்குஆதரவாகச் செல்லாமல் விழிப்புடன் செயற்படவும் என்றார்.