வடக்கு மாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடம் புதிதாக ஒரு லட்சம் பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தேவையான கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நாட்டில் இதுவரை 11 மில்லியன் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார் .