வடக்கில் கொரோனா சிகிச்சை நிலையங்கள் தயாா்படுத்தப்படுகின்றன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2 ஆம் மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக இயங்கிய இடம் கொரோன சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஒரு விடுதி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article