லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், நேற்று (மார்ச் 22) புறப்படவிருந்த ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸின் UL 503 மற்றும் UL 504 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விமானங்களில் பயணிக்க முன்நோக்கியிருந்த பயணிகள், மேலதிக தகவல்களுக்கு தங்களது பயணச்சீட்டுகள் வழங்கப்பட்ட மையங்களை தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.