யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (மே 11) காலை புறப்பட்ட யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி, ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காலை 7.30 மணியளவில் பளை கச்சார்வெளி புகையிரத கடவையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பளை தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் இதனால் குடும்பம் பேரிழப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடலம் தற்பொழுது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.