யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அனுமதியின் பிரகாரம்நியமிக்கப்பட்ட திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (ஜூன் 24) காலை 10.40 மணிக்கு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனதுகடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலகமேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில்மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களின் பாரியார் மற்றும் பிள்ளைகள் ஆகியோர் அழைப்பின் பேரில் நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள். அத்துடன் சர்வமதகுருமார்களின் ஆசியுடன் வரவேற்பு நிகழ்வானது ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.