By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!
Share
Notification
Latest News
நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
யாழ்ப்பாணம்
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

Last updated: 2023/03/27 at 9:59 AM
Published March 27, 2023 416 Views
Share
6 Min Read
SHARE
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு நேற்று (மார்ச் 26) யாழ்.நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவும் இந்த பொருளாதார நெருக்கடி நிமிர்த்தமாக குறைந்த வருமானம் பெருகின்ற வறுமைக்குள் உள்ளாகி இருக்கின்ற குடும்பங்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக ஜனாதிபதியின்  யோசனைகளுக்கு அமைய இந்த திட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நாட்டு விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்து அந்த நெல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற குடும்பங்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு தடவைகள் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு அமைய அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசாங்க அதிபர்கள் அந்தந்த மாவட்டங்களில் விளைந்திருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்து அந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு அரிசியாக மாற்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெட்டயர் வயல்நிலம் இருக்கின்ற போதும் எங்களுக்கு 300 ஹெட்டயர் நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எங்களுக்கு 25 ஹெட்டயர் நெல்லை கூட கொள்வனவு செய்ய முடியாது போயிருந்தது.
அதனால் நாங்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு அமைய தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அரிசி கிடைக்கப்பெற்று இருக்கிறது. இதன் மிகுதித்தொகை வவுனியா மாவட்டத்திலிருந்து கிடைக்க இருக்கின்றது.
தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளை வழங்கித்தான் நாங்கள் வாழ வேண்டும் என்கின்ற நிலை இருக்கக்கூடாது நாங்கள் என்னென்ன தொழிலை மேற்கொள்ளுகின்றோமோ அவற்றுள் மிக சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற அடிப்படையில் குடும்பங்களை தெரிவு செய்து இருந்தாலும் எங்களுடைய ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்கின்ற செலவினங்களை பார்த்தால் நாங்கள் அந்த வறுமையில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என நான் நம்புகின்றேன்.
இங்கிருக்கின்ற அநேகமாணவர்களிடம் கை தொலைபேசி இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கைத்தொலைபேசி இருக்கும் அந்த கைத்தொலைபேசிக்கு மாதமாதம் செலவழிக்கின்ற காசு எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தோமாக இருந்தால் அதில் 50% சேமிக்க முடியுமாக இருந்தால் எங்களுக்கு ஒரு 20 கிலோ அரிசி வாங்க முடியும்.
இவ்வாறு பல அனாவசியமான செலவுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் எங்களுடைய நாடு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றது.
நாங்கள் எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தினுடைய கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்களிடத்தில் என்ன வளங்கல் இருக்கிறதோ அந்த வளங்களை மிக உச்ச அளவில் பயன்படுத்தி முதலில் எங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் முயற்சி எடுக் வேண்டும்.
அரசாங்கம் அதைத் தரவில்லை இதைத் தரவில்லை என்ற குற்றச்சாட்டுதை மட்டும் வாசகமாக வைத்திருப்பதை தவிர்த்து அரசாங்கத்தினுடைய உதவிகளோடு நீங்களும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டமும் ஒரு சிறப்பான திட்டம் விலைவாசிகள் காரணமாக பயிற்செய்கைக்கு தேவையான பசளை விதைநெல் ஏனைய கூலிகள் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்ற போது, காலநிலையும் விவசாயிகளுக்கு பாதகமான சூழ்நிலையில் காணப்படுகின்றது.
அவர்கள் மிக கஷ்டப்பட்டு இந்த நெல்லை உற்பத்தி செய்து அதை காய வைக்கின்ற நேரத்தில் கூட மழை பெய்து அதை அழிக்கின்ற நிலையே காணப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு சவால்ளுக்கு மத்தியிலே தங்களுடைய உற்பத்தியை மேற்கொண்ட விவசாயிகள் தங்களுக்குரிய சரியான விலை கிடைக்காமையினால் அவதிப்பட்ட வண்ணம் இருந்தார்கள்
இதனால் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தது 88 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரைக்கும் நெல்உடைய தரத்துக்கு அமைவாக அதனை கொள்வனவு செய்வதாக அறிவித்தது.
இந்த நெல் கோள்வனவினை அந்த அந்த மாவட்டங்களில் இருக்கின்ற அரசாங்க அதிபர்கள்தான் அதனை செய்ய வேண்டும் எனவும், ஏனெனில் அதிலும் கருப்பு சந்தைக்காரர்களுடைய தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக.
இதில் இரண்டு விதமான நன்மைகள் இருக்கின்றது ஒன்று விவசாயிகள் தங்களுடைய நெல்லுக்கு போதிய விலையை பெற்றுக் கொள்ளுதல், அதேவேளை தற்காலிகமாக வறுமைக்கு உட்பட்டிருக்கின்ற பொதுமக்கள் தங்களுடைய சிக்கலை தவிப்பதற்கு ஒரு தற்காலிக ஏற்பாடு கிடைக்கின்றது.
இன்றைக்கு எங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய இளம் சமுதாயம் பற்றி தென்பகுதியில் இருக்கின்ற நண்பர்கள் கதைக்கின்ற போது வியப்பாகவும் கவலையாகவும் கேட்கின்றார்கள் யாழ் மாவட்டம் அவ்வளவு மோசமாக போய்விட்டது ஏன் என.
நாட்டில் இருக்கின்ற தேசிய பத்திரிகைகள் எதனை எடுத்தாலும் யாழ் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் தொடர்புடைய செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன, இங்கிருக்கின்ற பெற்றோர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கே செல்கின்றார்கள், என்ன செலவு செய்கின்றார்கள், எங்கிருந்து காசு வருகின்றது போன்ற விடயங்களை கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் உங்களுடைய பிள்ளைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல உங்களுடைய கிராமம் மட்டுமல்ல இந்த நாடு சீரழிந்து போகின்ற நிலைமை ஏற்படும். நாங்கள் போலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரோடு கலந்துரையாடல்கள் மேற்கொண்டு இருக்கின்றோம்.
எங்களுடைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா இது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றார்.
அது சம்பந்தமான விசேட  கலந்துரையாடல் ஒன்று மிக விரைவில் நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த குற்ற செயல்களை எவ்வாறு தடுப்பது, இதில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபடுபவர்களை எவ்வாறு இனம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக வேலை திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலைமைகளை நாங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோமாக இருந்தால் இயல்பாகவே எங்களுடைய கிராமங்களிலே, எங்களுடைய நகரங்களிலே குற்றச்செயர்கள் குறையும்.
இந்த மாவட்டத்தினுடைய கௌரவம் காப்பாற்றப்படும் யாழ்ப்பாண மண்ணுக்குரிய கௌரவமும் பெருமையும் மதிப்பும் பேணப்படும் உங்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும்.
ஆனபடியால் உங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். என்னிடம் நேற்றைய தினம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள்.  வறுமையில் வாடுகின்ற குடும்பங்களில் இருந்து தான் போதைவஸ்து பாவிப்பவர்கள் வருகின்றார்களாக இருந்தால் அவர்களுடைய குடும்பத்த போய் பார்த்தால் அங்கே வறுமையாக இருக்கின்றது, அங்கே வசிப்பதற்கு கூட போதிய இடம் இல்லாமல் இருக்கின்றார்கள் என சொல்லுகின்றார்கள்.
ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகின்றார்கள் என சொல்லுகின்றார்கள், ஆனால் ஒருநாள் போதைவஸ்து பாவிப்பதற்கு 15,000 வரைக்கும் அந்த குடும்பத்தவர்கள் செலவழிக்கின்றார்களாக  இருந்தால் அந்தக் பணம் எங்கிருந்து வருகின்றது இது பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை இதற்குப் பின்னால் இருக்கின்ற ரகசியங்கள் என்ன என்பதைப் பற்றி யார் கவலைப்படுகிறீர்கள்.
அவ்வாறானால் அந்த குடும்பம் வறுமையான குடும்பமா? அந்தப் பையனுக்கு அல்லது அந்த பெண்ணுக்கோ எங்கிருந்து காசு கிடைக்கிறது இவை போன்ற கேள்வியை நீங்கள் எழுப்ப வேண்டும் இதில் மிக கவனம் செலுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக உரிய தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் உங்களுடைய பிரதேசங்களில் இவ்வாறான குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களை நீங்கள் இனம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்க வேண்டும். உங்களுடைய கிராம உத்தியோகத்தர் இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
ஆகக்குறைந்தது அவர்களுக்காவது அல்லது போலிஸாருக்கு அல்லது பிரதேச செயலகத்துக்கு அல்லது சமூக சேவை உத்தியோகத்திற்கு யாருக்காவது இந்த தகவல்களை தெரிவித்து உங்களுடைய கிராமங்களில் இந்த குற்றங்களை செய்வவர்கள் வராதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான, சிறந்த சமுதாயத்தில் உள்ளவராக நீங்கள் மாற முடியும் என இவ்விடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

You Might Also Like

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

Anarkali March 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வெடுக்குநாரி மலையில் சிவலிங்கம் விசமிகளால் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்!
Next Article நெடுந்தீவில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்க உற்பத்தி சார் பயிற்சிநெறி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?