கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர்முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று (ஒக்.15) கையளிக்கப்பட்டது.
கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்துவந்தது.
அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறுபல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்குபலன்கிட்டவில்லை.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 07 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்
வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியைஉரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன்உத்தரவிட்டார்.
எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிசார் காணியைஉரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.
இந்த நிலையில், இன்றையதினம் (ஒக். 15) புதன்கிழமை நீதிமன்ற உத்தரவைநிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ளபகுதிக்கு வருகைதந்து, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியைஉரிமையாளர்களிடம் கையளித்தனர்.
தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குதற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் தனித்துஇயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள்தமக்கு காணி இல்லை என வேறு இடத்தில் நீண்ட காலமாக வாசித்து வந்தநிலையில் இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதால் அவர்கள்மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்