யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாகஅமலுக்கு வரும் வகையில் முல்லைதீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ்நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாகயாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினை செய்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில்வாகனம் செலுத்தி சென்ற போது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் அவருக்குஎதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம்தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய்இலஞ்சம் பெற்றிருந்தார்.
இருப்பினும், கொடுத்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இவ்வாறான, பின்னணியில் தலைமை பொலிஸ் நிலைய பதில்பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும்பொலிஸார் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை. இந்த விடயமானது நேற்று மீண்டும் ஊடகங்களில்பேசுபொருளாகிய நிலையிலேயே வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபரால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டது