யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் வழிகாட்டலில் யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் பிரதேச கலாசார பேரவைகளின் பங்களிப்புடன் இரண்டாவது முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முழுநிலா கலைவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் இரண்டாவது நிகழ்வில் யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை ஆகிய பிரதேச கலைஞர்களின் நிகழ்வுகள் மேடையேறவுள்ளது.