யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்றுசிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று சனிக்கிழமை (பெப். 22) கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள்மீது கடந்த சில தினங்களாக அரியாலைபகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
கல் வீச்சு தாக்குதலில் ரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர்காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலையஅதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்ரயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளிஒன்றில் மூன்று சிறுவர்கள் ரயில் மீது கல் வீச்சு தாக்குதலை நடாத்துவது பதிவாகிஇருந்தது.
குறித்த காணொளியில் அடிப்படையில், மூன்று சிறுவர்களும் அடையாளம்காணப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களையாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.