போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள்சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில்மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்டபுனரமைப்பு வேலைகள் இன்றைய தினம் (ஜூன்21) தெல்லிப்பளை காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு மற்றும் பருத்தித்துறைமூன்றாம் வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.
அந்த வகையில் காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு பணியின்ஆரம்ப நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும்யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம்சந்திரசேகர் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சண்முகநாதன்சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச்செயலாளர் ஜீவநாதன், யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ் , வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.