இலங்கை போக்குவரத்துச் சபையால் இன்று (ஏப்ரல் 29) யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு புதிய பேருந்து சேவைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதில், யாழ்ப்பாணம் முதல் மானிப்பாய் – ஆலங்குளாய் – அளவெட்டி வழியாக தெல்லிப்பழை நோக்கியும், மற்றொன்று காங்கேசன்துறை முதல் பலாலி வீதியூடாக நடைபெறும் வகையிலும் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்கவின் தலைமையில் இந்த சேவைகள் மீள அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தப் பாதைகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா மற்றும் போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.