யாழ்ப்பாணம் நகரில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் அளவுக்கதிகமாக உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளை ஊசி மூலம் எடுத்துக்கு கொண்டமையினால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
32 வயது மதிக்கதக்க இளைஞனே யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஓகஸ்ட் 21) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் உறுதியான வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.