யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடான நேரம் இவர்கள் துவிச்சக்கர வண்டிகளை திருடி அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
மேலும், தொலைக்காட்சிப் பெட்டி, இலத்திரனியல் உபகரணங்கள், கேஸ் சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.