தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி நேற்றையதினம் (28.04) மறைந்த தேனிசை செல்லப்பா அவர்களுக்கு முல்லைத்தீவு றெட்பானா சந்திபகுதியில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர் யோ.புரட்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலிஉரை நிகழ்த்தியுள்ளார்கள்
வள்ளுவர்புரம்,இளங்கோபுரம், மாணிக்கபுரம், தேராவில் ஆகிய பிரதேச மக்களின் ஒழுங்கமைப்பில் றெட்பான சந்தியில் இன்று (29/04) இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.