பயணிகளுக்கான பருவகால சீட்டை வைத்திருந்தும், பாடசாலை மாணவர்களைஇலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து இறக்கிய ஹட்டன்டிப்போவில் பணியாற்றும் நடத்துனரின் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நடத்துனர் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, விசாரணைமுடியும் வரை அவரது பணியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் SLTB பருவகால சீட்டுக்களைவைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் நீண்ட காலமாக பேருந்துகளில் ஏறஅனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால், SLTB பருவகாலசீட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்க்கும் SLTB சாரதிகள் தொடர்பானதகவல்களை 1958 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துதெரிவிக்குமாறு போக்குவரத்து அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.