போதைப்பொருள் கட்டுப்படுத்தலில் கடற்படை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைமட்டுமே செய்யமுடியும் என சுட்டிக்காட்டிய இலங்கை கடற்படையின் பிராந்தியகட்டளைத் தளபதி அட்மிரல் புத்திக லியனகமகே பொதுமக்களது பங்களிப்பும்எமக்கு கிடைக்கப் பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும் என்றும்தெரிவித்தார்.
கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறைகடற்படை தளத்தில் இன்றையதினம் (ஒக்.12) மேற்கொண்ட ஊடக சந்திப்பில்இவ்வாறு தெரிவித்திருந்தார்
அவர் மேலும் கூறுகையில் –
வடக்கு கடல் மார்க்கமாக போதைபொருள் கடத்தல் நடைபெற்றுவருவது குறித்துநாம் அதிக அக்கறை செலுத்தி மேற்கொண்ட முயற்சிகளால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல நூறு கிலோ போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
குறித்த குற்றத்துடன் தொடர்புடைய பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டும்உள்ளனர்.
இதே நேரம் கடற்படை ஒரு பிரதேசத்துக்கானதல்ல. அது நாடு முழுவதுக்குமானஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு. இலங்கைத் தீவின் அனைத்து கடற்பரப்பினதும்பாதுகாப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் முடியுமானவரை திறன்படசெய்துவருகின்றோம்.
கடற்படைக்கு உள் நாடு புலனாய்வு கட்டமைப்பின் தகவல் மடுமல்லாது சர்வதேசபுலனாய்வு தகவல்களும் கிடைக்கப்பெற்று துரித நடவடிக்கை எடுக்கின்றது. ஆனாலும் எமக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் அவசியம்.
அந்தவகையில் எமக்கு கிடைக்கின்ற தகவல்களுடன் மக்களாகிய நீங்களும்தகவல்களை வழங்கி குறித்த செயலில் ஈடுபடும் தரப்பையும் அவர்களதுகட்டமைப்பையும் இல்லாதொழித்து போதைப்பொருள் அபாயத்திலிருந்து நாட்டைபாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.