யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் மட்டும் போதைப் பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளின் மட்டுமே 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர்.
இவை மூன்றையும் பயன்படுத்துவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மூக்கு மூலமாக நுகர்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஊசி மூலம் அதனை நுகர்கின்றனர்.
அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது