போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்என்ற காரணத்துக்காக, இளைஞர் ஒருவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்றுமுழங்காலிடச் செய்து, அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொலை செய்தசம்பவமொன்று, ஜா–எல – பமுனுகம, மோர்கன்வத்த பிரதேசத்தில் நேற்று (பெப். 21) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், பொதுமக்களின் அறிவிப்பின்பேரில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ள அவ்விளைஞன் 29 வயதுடையவர் என்றும் தங்களுக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பானதகவல் வழங்கியவர் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும்உயிரிழந்தவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார்தெரிவித்தனர்.
இவ்வாறிருக்க, குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டிக்குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்குபணப்பரிசில்கள் வழங்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்தவீரசூரிய தெரிவித்துள்ளார்.
1997 என்ற இலக்கம் ஊடாக இதுபோன்ற தகவல்களை வழங்க முடியும் என்றும்ரி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 இலட்சம் ரூபாய் வரைபணப் பரிசில் வழங்கப்படும் எனவும் கூறிய பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.