அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பரிந்துரையின் பேரில், பொதுப் போக்குவரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடக்கூடிய புதிய முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
071 9090900 என்ற கைபேசி இலக்கத்திற்கு SMS மற்றும் WhatsApp வழியாகவும், 021 228 5120 என்ற நிலையான தொலைபேசி எண்மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
இந்த தகவல்களைக் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர், மாவட்டச் செயலகத்தில் இன்று (ஓகஸ்ட் 06) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக பேரூந்துகளில் ஒட்டும் நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி உ. தர்சினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.