ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கானதலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்குமாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளில் எந்தவொருகட்சியும் பெரும்பான்மையைப் பெறாததால், அந்த நிறுவனங்களின்தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு உள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள்மற்றும் உப தலைவர்கள் நியமிக்கப்படும் விதம் குறித்து பொதுமக்களுக்குத்தெரிவிக்கும் செய்தித்தாள் விளம்பரங்களை முதலில் வெளியிட வேண்டும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட சபைகளின்உறுப்பினர்கள் கூடி, தங்கள் தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்களுக்கான நியமனம் ஜூன் 17 ஆம் திகதிக்குப்பிறகு இடம்பெறும்.
நியமனங்கள் வழங்கப்படும் திகதிகள் குறித்து உள்ளூராட்சி ஆணையாளர்முன்கூட்டியே அறிவிப்பார் என்றும், நாளொன்றில் மாகாணத்தில் உள்ள ஒருஉள்ளூராட்சி சபையொன்றுக்கு மட்டுமே நியமனத்தை மேற்கொள்ள முடியும்என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.