2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 13ஆம் திகதி நிறைவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.