பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்குஅருகாமையில் இன்று (ஏப்ரல்12) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றவிபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாலியில் இருந்து யாழ்பாணம் நோக்கி இடது பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன், பின்பக்கமாக மோட்டார் வாகனத்தில்பயணித்த முதியவர் ஒருவரே இவ்வாறு மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலாலி கிழக்கு வசாவிளான் பகுதியினை சேர்ந்த கந்தவர்ணம்செல்வநாயகம் (வயது62) என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்தின் அடிப்படையில் உழவு இயந்திரத்தின் சாரதியான 27 வயதுஇளைஞன் ஒருவனை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவைளை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதியவரின் சடலம் மேலதிகவிசாரணைகளுக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது.