By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை ஆய்வுசெய்ய ஜனாதிபதி ரணில் முடிவு!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை ஆய்வுசெய்ய ஜனாதிபதி ரணில் முடிவு!
யாழ்ப்பாணம்

பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை ஆய்வுசெய்ய ஜனாதிபதி ரணில் முடிவு!

Last updated: 2023/08/10 at 8:30 AM
Published August 10, 2023 280 Views
Share
2 Min Read
SHARE

பறாளாய் முருகன் ஆலயத்தின் அரச மரத்தின் வயதை விஞ்ஞானபூர்வமாக ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாரென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களான த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இருவரும் நாடாளுமன்றத்தில் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் சங்கமித்தையால் நடப்பட்டது எனக் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது.

பறாளாய் முருகன் கோவிலில் வரலாறு சுமார் 300 ஆண்டுகளுக்கு உட்பட்டது என குறிப்பிட்டு சம்பவத்தின் பின்னணியையும் வரலாற்று சுருக்கத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் ஜனாதிபதியிடம் கோரினர்.
இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்றால் சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார், பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

பறாளாய் முருகன் கோவிலில் உள்ள அரச மரம் சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பது தனது அபிப்பிராயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ,போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டியிருந்த அரச மரங்களை எல்லாம் அழித்து விட்டதாக தெரிவித்தார்.

மரத்தின் ஆயுள்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா வர்த்தமானி வெளியிடப்பட்டது ?என ஜனாதிபதியிடம் கூட்டணியினர் கேள்வி எழுப்பினர்.

அப்படியான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் அது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவுக்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது? எனவும் கேள்வி எழுப்பினர். இதன் மூலம் அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய சட்டபூர்வமற்ற வர்த்தமானி என்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானி வெளியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனது செயலர் சமன் எக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

You Might Also Like

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

Anarkali August 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தமிழகத்தில் கரைசேர்ந்த எழுவைதீவு மீனவர்கள்!
Next Article ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?