தீவகங்களில் நிலவும் உள்ளூர் பேருந்துப் பிரச்சினை தொடர்பில் நாம்அறிவோம், இது தொடர்பில் அரசாங்கம் யாழ்ப்பாணத்துக்கு வழங்கவுள்ள புதியபேருந்துகளில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவுக்கு வழங்கவேண்டும் எனகேட்டுள்ளோம் என கடந்த மார்ச் 30 அன்று அனலைதீவில் இடம்பெற்ற மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் ….
நெடுந்தீவு பிரதேசத்துக்கு இந்த மாதம் ஆரம்பத்தில் நாம் நடமாடும் சேவைக்குச்சென்றிருந்தோம். தீவகப் பிரதேசங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துகவனிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் அதற்குரியஒழுங்குகளைச் செய்து வருகின்றோம்.
நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தின் தீவகத்தின் 4 இறங்குதுறைகளைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன். நெடுந்தீவுஇறங்குதுறை பகுதியளவிலும், நயினாதீவு மற்றும் எழுவைதீவு இறங்குதுறைகள்முழுமையாகவும் புனரமைக்கப்பட்டிருந்தன. அனலைதீவு இறங்குதுறையைபுனரமைக்க திட்டமிட்டிருந்தாலும் துரதிஷடவசமாக அப்போது அதுநடைபெறவில்லை. அனலைதீவு இறங்குதுறையை எமதுமுன்னுரிமைப்பட்டியலில் சேர்த்துள்ளோம். விரைவில் அதனைப் புனரமைத்துதருவோம்.
உள்ளூர் வீதிகளை புனரமைப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் 1,500 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை அரசாங்கம் புனரமைக்கவுள்ளது. அதற்காகஇந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தேவையின்முன்னுரிமை அடிப்படையில் அதனைச் செய்யவுள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார்.