நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின்விநியோகம் சீரற்ற நிலையில் வழங்கப்பட்டுவருவதால் பாவனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகதெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின்சாரம் , மின்பிறப்பாக்கி மூலமே விநியோகம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கென மூன்று இயந்திரங்கள் உள்ள நிலையில் ஒரு இயந்திரம் பழுதடைந்துள்ளதால் ஏனையவற்றினை மாற்றி மாற்றி சுழற்சி அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையினால் நெடுந்தீவு வைத்தியசாலைக்கும் மின்விநியோகம் சுழற்சி முறையில் வழங்கப்படுவதனால் அவசர நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்குவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழுதடைந்த மின் இயந்திரத்தின் பகுதி ஒன்று திருத்தத்திற்காக யாழ் நகர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், திருத்த வேலைகள் முடிவுற்று அவ் இயந்திரம் இயங்கத் தொடங்கினால் சீராக மின்விநியோகம் செய்யலாம் எனவும் , ஏனைய இரு இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கமுடியாது என நெடுந்தீவு மின்சார விநியோக பகுதியினரை தொடர்புகொண்டபோது தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.