நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில், இலங்கை பெண்கள் பணியகத்தின் அனுசரனையுடன் வருமான வழிகாட்டல்பயிற்சிநெறி இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (ஒக்.29 )அன்று இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட சிறுதொழில் செய்யும் பெண் முயற்சியாளர்கள் கலந்துகொண்டுபயன்பெற்றனர்.
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக விஞ்ஞான தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர் கே. பரணிதரன் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.