வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில்நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள துயரச்சம்பவம்இடம்பெற்றுள்ளது
சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார்
இதன்போது கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தி சாவகச்சேரி வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல்20) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிநமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது